Wednesday, August 11, 2010

மொக்கையோ மொக்கை

மொக்கையோ மொக்கை


மொக்கை1



ஹாக்கி பிளேயர் ஹாக்கி விளையாடலாம்;



கிரிக்கெட் பிளேய கிரிக்கெட் விளையாடலாம்;



சி.டி பிளேயர் சி.டி விளையாடுமா?



மொக்கை2



தங்கச் செயினை உருக்கினா

தங்கம் வரும்.



வெள்ளிச் செயினை உருக்கினா

வெள்ளி வரும்.



சைக்கிள் செயினை உருக்கினா

சைக்கிள் வருமா?



மொக்கை3



டிவியை

வாட்ச் பண்ணமுடியும்.



வாட்ச்சை

டிவி பண்ண முடியுமா?



மொக்கை4



ஹீரோவில சின்ன ஹீரோ பெரிய ஹீரோ இருக்கலாம்.

ஜீரோவில சின்ன ஜிரோ பெரிய ஜிரோ இருக்க முடியுமா?



மொக்கை5



கையால் போட்டால் கையெழுத்து;

காலால் போட்டால் காலெழுத்தா?



கைவெட்டு என்றால்

கைதுண்டாகும்



கால்வெட்டு என்றால்

கால்துண்டாகும்



மின்வெட்டு என்றால்

மின்சாரம் துண்டாகுமா?



மொக்கை6



முட்டை போடுற கோழிக்கு

ஆம்லெட் போடத் தெரியாது.



ஆம்லெட் போடுற நமக்கு

முட்டை போடத் தெரியாது.



மொக்கை7



மனிதனுக்கு வந்தால் அது

யானைக்கால் வியாதி!



யானைக்கு வந்தால்

அது மனிதக்கால் வியாதியா?



மொக்கை8



குக்கர் விசிலடிச்சா

பஸ் போகாது



கண்டக்டர் விசிலடிச்சா

சோறு வேகாது!

,

,

இந்தியா ஒளிர்கிறது......

இந்தியா ஒளிர்கிறது......






இந்தியா ஒளிர்கிறது......



எப்பிடி



கீழ வாங்க
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
 
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
 
.
.
.
.
.
.
.
.
.
 
 

Monday, August 9, 2010

நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?!

நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?!



-சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள்
 
 
'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!'


நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக் காரணிகள் போக... மன சஞ்சலம், பயம், தயக்கம், தாழ்வு மனப்பான்மை என உள்ளே இருந்து உருட்டி மிரட்டும் சாத்தான்கள் வேறு! இவற்றைத் தாண்டி எந்த ஒரு காரியத்திலும் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தினால்தான் வெற்றி வசமாகும். இந்த நிலையில் 'மன ஒருமைப்பாட்டை' வளர்த்துக்கொள்வது எப்படி?



மனசே... கவனம் ப்ளீஸ்!



"மன ஒருமைப்பாடு என்பது ஒரு வகையில் நல்ல நடத்தையைக் குறிக்கும். சிதறாத கவனம் இருக்கிறவர்களிடத்தில் நல்ல குணங்களும், வெற்றி பெறுவதற்கான தகுதிகளும் அதிகமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது!" என்று ஆரம்பிக்கிறார் உளவியல் நிபுணரான கீதாஞ்சலி ஷர்மா. "நல்ல கவனம் இருப்பவர்கள் எதையும் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியும். உள்வாங்கிக்கொண்டதைச் சிந்தித்து அதன் மூலம் கிடைக்கின்ற காரணங்களை வைத்துக்கொண்டு சூழ்நிலைகளைச் சமாளித்துவிடுவார்கள்.



மன ஒருமைப்பாடு சமநிலையில் இல்லாவிட்டால், தங்களால் எது செய்ய முடியும், எது செய்ய முடியாது என்று வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாது. எந்த நேரத்தில் எதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாததால் மனது அதைச் செய்யலாமா, இதைச் செய்யலாமா என்று அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.



உதாரணமாக, வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கலாம். ஆனால், உங்கள் மனம் நேற்று பார்த்த திரைப்படத்தில் லயித்திருக்கும். உங்கள் மேலதிகாரி உங்களிடத்தில் முக்கியமான விஷயத்தைப்பற்றிப் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கண்கள் அறையை அளந்துகொண்டு இருக்கும். நீங்கள் தொலைபேசியில் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உங்கள் கைகள் வேறு எதையோ கிறுக்கிக்கொண்டு இருக்கும். இங்கே கவனம் எதிலும் பதியவில்லை. ஒப்புக்கு இருக்கிறீர்கள். இது ஒரு வகை.



உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டைக் கேட்கிறீர்கள். உங்களை மெய்மறந்து அந்த வரிகளை முணுமுணுக்கிறீர்கள். யார் கூப்பிட்டாலும் உங்கள் காதில் விழுவது இல்லை. சேனலில் பரபரப்புச் செய்தி வாசித்துக்கொண்டு இருக்கும்போது, 'அவ போட்டிருக்கிற செயின் ரொம்ப நல்லாருக்குல்ல!' என்று கேட்கிறீர்கள். இங்கே உங்கள் மனம் ஒன்றில் மட்டும்... குறிப்பாக, உங்களுக்குப் பிடித்த ஒரு காரியத்தில் மட்டும் கவனம்கொண்டு இருக்கிறது. இது இன்னொரு வகை!



இந்த இரண்டு வகைகளிலும் அடிப்படை விஷயம் ஒன்றுதான். ஆனால், அது அமைந்திருக்கிற சூழ்நிலை, செயல்பாடுகள் வேறு வேறு. கான்சன்ட்ரேஷன் எனும் 'மன ஒருமைப்பாடு' வெறும் கவனித்தல் சார்ந்து இயங்குவது அல்ல. ஒரு செயல் செய்யப்படுகிற இடம், காலம், மனிதர்கள் ஆகியோரும் முக்கியம். அவற்றை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்.



இப்போது மேற்சொன்ன இரண்டு விஷயங்களை வேறு விதத்தில் காண்போம். வகுப்பில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால், பேராசிரியர் பாடம் எடுக்காமல் உங்கள் 'ஆளை' செமினார் எடுக்கச் சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உங்கள் கவனம் முழுக்க அவர்கள் மீதே பதிந்திருக்கும் இல்லையா? இங்கு உங்களுக்குப் பிடித்த ஒரு விஷயமும் பிடிக்காத ஓர் அம்சமும் இணைந்திருக்கையில் நீங்கள் வெறுக்கும் ஒரு செயல் இனிமையாக இருக்கிறது. அதனால் கவனம் ஓர் இடத்தில் மட்டும் இருக்கிறது. அந்தக் கவனம் எதில் இருக்கிறது என்பதுதான் இங்கு கேள்வி. அவரின் அழகிலோ அல்லது பாடம் நடத்தும் விதத்திலோ இருக்கலாம். அவர் நடத்துகிறார் என்பதாலேயே உங்களுக்குப் பாடம் கவனிக்க விருப்பம் இருக்கலாம்.



உங்களுக்குப் பிடித்த சினிமா பாட்டை மெய்மறந்து பாடிக்கொண்டு இருக்கும் சமயத்தில் டி.வி-யில் கிரிக்கெட் மேட்ச் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்போது என்ன செய்வீர்கள்? இரண்டிலும் கவனம் செலுத்தியபடியே இருப்பீர்கள். காரணம், இரண்டும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள். இங்கே கவனம் இரண்டிலும் சரிபாதியாகச் சிதறுகிறது. இதை 'ஸ்காட்டர்ட் திங்கிங்' என்பார்கள்.



நிமிடத்துக்குப் பல ஆயிரம் சிந்தனைகள் நம் மூளையில் தோன்றி மறைவதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. அப்படி இருக்கையில் ஏதேனும் ஒரு காரியத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த முடியும். இரட்டைக் குதிரை சவாரி செய்யலாம்தான். ஆனால், பாதுகாப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இலக்கை அடைவதும் முக்கியம். தியானம், யோகா போன்ற சில பயிற்சிகளைச் செய்வதன் மூலமும் திட்டமிடுதல் மூலமும் நம் மன ஒருமைப்பாட்டை மேம்படுத்திக்கொள்ள முடியும்!" என்கிறார் கீதாஞ்சலி ஷர்மா.



மனசே... நீ ஒரு மந்திரவாதி!



"தினமும் படிக்கும் பக்க அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து பக்கங்கள் அதிகமாகப் படியுங்கள். அல்ஜீப்ரா கணக்குப் பாடத்தில் தினமும் போட்டுப் பார்க்கும் கணக்கு அளவுகளைவிடக் கூடுதலாக ஐந்து கணக்குகள் வொர்க்-அவுட் செய்யுங்கள். ஜிம்மில் கொஞ்சம் கூடுதலாக புல்-அப்ஸ் எடுங்கள். இவை மனதை ஒருமுகப்படுத்த உதவும் அடிப்படைப் பயிற்சிகள்!" என்று உற்சாகப்படுத்துகிறார் அஸ்வின். இவர் கல்லூரி மாணவர், கார்ப்பரேட் ஊழியர் களுக்கு 'மன மேம்பாடு' பயிற்சியளித்து வரும் 'வின் டிரெய்னிங்' நிறுவனத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர்.



"எப்படி ஒரு விளையாட்டு வீரர் தொடர்ந்து பயிற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டே இருந்து தன் சாதனை எல்லைகளை நீட்டித்துக்கொள்கிறாரோ, அதே போல மனதுக்கும் சில பயிற்சிகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும். ஆரம்பத்தில் இரண்டு விநாடிகள் கவனமாக இருக்கும் மனம், அடுத்த சில மைக்ரோ நொடிகளில் வேறு ஒன்றுக்குத் தாவிவிடும். ஆனால், தொடர் பயிற்சிகள் மூலம் 'இரண்டாவது மனதை' அடைந்துவிடுவீர்கள். அப்போது உங்கள் மன ஒருமைப்பாடு, கவனம் இன்னும் அதிகமாகும்!" என்பவர் அதற்கென சில பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார்.



ஆப்பிள் அல்லது பென்சில் அல்லது உங்கள் குழந்தையின் போட்டோ இப்படி ஏதேனும் ஒரு பொருளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். ஓர் அமைதியான அறையில் அந்தப் பொருட்களை உங்கள் கண் முன்வைத்து அதையே ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்கு உற்றுப் பார்க்கவும். அப்படிப் பார்க்கும்போது கண்கள் மட்டும் அங்கேயே நிலைகுத்தி இருக்கும். மனம் வேறெங்கோ அலைந்துகொண்டு இருக்கும். மீண்டும் உங்கள் மனதை அதே பொருளின் மீது இழுத்து வாருங்கள். மீண்டும் மீண்டும் இதைச் செய்வதன் மூலம் மனம் எங்கே இருந்தாலும் அதை இப்போதைய, இந்த நிமிடத்தில் உங்களால் நிலை நிறுத்த முடியும்.



'இந்த செயலை என்னால் முடிக்க முடியுமா?' என்று உள்ளுக்குள் சந்தேகம் தோன்றியவுடனே நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் படம் பார்ப்பது! ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். ஒவ்வொரு செயலைச் செய்யும் முன்பும் நீங்கள் படம் பார்க்க வேண்டும். ஆனால், இந்தப் படம் திரையரங்குகளில் ஓடும் படம் அல்ல. உங்கள் மனத் திரையில் ஓட்டிப் பார்க்க வேண்டிய படம். சந்தேகமோ, குழப்பமோ, நம்பிக்கை இழந்துபோகிற சமயங்களிலோ நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை மனத்திரையில் காட்சிகளாக ஓட விடுங்கள். எப்படிச் செய்தால் இது சரியாக வரும், அந்தச் செயலை முடிக்க முடியும் என்பது போன்ற விளக்கங்கள் இதில் தெரிய வரும்.



ஒரு கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எதைப்பற்றியாவது சிந்தியுங்கள். அடுத்த வாரம் தோழியை சினிமாவுக்குக் கூட்டிப் போவது, வோடஃபோன் நிறுவனத்தின் ஜூஜூ விளம்பரம் - இப்படி எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். அந்த சிந்தனை ஆரம்பிக்கிற நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். அதே சிந்தனை எந்த இடத்தில் முடிந்து இன்னொரு சிந்தனை ஆரம்பிக்கிறதோ அந்த நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள். இப்போது அந்த நேர இடைவெளிதான் எவ்வளவு நேரம் நம்மால் ஒரு நினைவில் தாக்குப்பிடிக்க முடிகிறது என்பதை உணர்த்துவது. இந்தப் பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்யும்போது ஒன்றின் மீது கவனம் செலுத்துகிற நேரம் அதிகரித்துக்கொண்டே இருப்பதை உணர்வீர்கள்!



'சும்மா இருப்பதே சுகம்' என்பது சித்தர்கள் வாக்கு. ஓர் அமைதியான அறையில் ஒரு நாற்காலி போட்டு அமருங்கள். அப்படியே 10 நிமிடங்கள் அமர்ந்திருக்கவும். உடலில் தன்னிச்சையாக எந்த ஓர் அசைவையும் ஏற்படுத்தாமல் உட்கார்ந்திருக்க வேண்டும். இயல்பாக, ரிலாக்ஸ்டாக இருங்கள். அதற்காக, 'ரிலாக்ஸாக இருக்க முயற்சிக்கிறேன் பேர்வழி' என்று உங்களைக் கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டாம். இதனை தீவிரமான பயிற்சியாகச் செய்துவந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் உங்களால் ஒரு செயலில் முழுக் கவனம் செலுத்த முடியும்.



செய்தித்தாள் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் வந்திருக்கும் கட்டுரையைப் படிக்கவும். படித்து முடித்தவுடன் எவ்வளவு வார்த்தைகள் அந்தக் கட்டுரையில் இருந்ததோ அவற்றில் சிலவற்றையாவது ஞாபகத்துக்குக் கொண்டுவர முடிகிறதா என்று முயற்சியுங்கள். அப்படி உங்கள் நினைவில் இருக்கும் சில வார்த்தைகளை ஒரு காகிதத்தில் எழுதவும். இப்போது மீண்டும் அந்தக் கட்டுரையைப் படிக்கவும். முடித்தவுடன் அதை எழுதவும். முன்பைவிட இரண்டு மூன்று வார்த்தைகள் கூடுதலாகி இருந்தால், உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக்கொள்ளுங்கள். இப்படி நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் பயிற்சி செய்வது உங்கள் கவனத்தை மட்டுமல்லாமல் நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.



ஒரு செயலைச் செய்துகொண்டு இருக்கும்போது தலையைச் சொறிவது, விரல் நக அழுக்குகளை எடுப்பது, பேனாவை உதட்டில் உருட்டி விளையாடுவது போன்ற தேவை இல்லாத அசைவுகளைத் தவிர்க்கவும். நேரம் மிச்சமாவதுடன் கவனமும் அதிகரிக்கும்.



முழுக் கவனத்துடன் ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கும்போது உங்கள் மனதில் வேறு ஏதேனும் எண்ணங்கள் தோன்றினால், உடனே அதை ஒரு காகிதத்தில் குறித்துக்கொண்டு, 'இந்தச் செயலை... இந்தத் தேதியில்... இத்தனை மணிக்குச் செய்ய வேண்டும்' என்று எழுதிவைத்துவிடுங்கள். உங்கள் திட்டங்களை வகுத்ததுபோலவும் இருக்கும், உங்கள் கவனம் சிதறாமலும் இருக்கும்.



இவை தவிர, எந்த ஒரு செயலைச் செய்யும்போதும் அதில் ஏனோதானோ என்று இல்லாமல், உங்களின் முழு ஈடுபாட்டையும் செலுத்துங்கள். காரணம், ஈடுபாடு இல்லாமல் போனால், மன ஒருமைப்பாடு வெறும் கனவு மட்டுமே!



"அர்ஜுனா! உன் கண்களுக்கு அந்தப் பறவை தெரிகிறதா?" என்று துரோணாச்சாரியார் கேட்க, "இல்லை... எனக்கு அந்தப் பறவையின் கண்கள் மட்டுமே தெரிகின்றன" என்றான் அர்ஜுனன். "அப்படியானால் அம்பைச் செலுத்து!" துரோணரின் கட்டளை காற்றில் கரையும் முன் அம்பை எய்தினான். குறி தப்பவில்லை.



ஆம் ... முழுக் கவனத்துடன் எய்தினால், வெச்ச குறி தப்பாது !

"நேரத்திட்டமிடலில்” வெற்றியடைய 10 சுலபமான வழிகள்!!

    வேகமான இன்றைய உலகில், நாமும் வேகமாவும், விவேகமாவும் இல்லையென்றால் வாழ்க்கை ஓட்டத்தில் மிகவும் பின்தங்கிவிடுவோம் என்பதுதான் நிதர்சனம். இந்தப் புரிதலினால், நம்மில் பலர் இன்று வாழ்வியல் முறைகளில் பலவகையான மாற்றங்களை அவ்வப்போது செய்துகொண்டு, வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி பயணிக்கிறோம்.

வாழ்வியல் முறை மாற்றங்களில் மிக முக்கியமானதும், எளிதில் கைவரப்பெறாததுமாய் ஒன்று இருக்குமென்றால், அது நேரத்திட்டமிடலே என்பது நம்மில் பலர் அறிந்திருக்கும் ஒன்று. நேரத்திட்டமிடல் குறித்த புரிதல்களையும், சில/பல நுணுக்கங்களையும் புத்தகங்கள், துறை வல்லுனர்கள், நண்பர்கள் மூலமாக எனப் பலவாறாக சேகரித்து வைத்திருப்போர் பட்டியலில் நம்மில் பலர் கண்டிப்பாக இருப்போம்!



நேரத்திட்டமிடல் குறித்த திட்டங்கள், ஆயத்தங்கள், முயற்ச்சிகள் என எல்லாம் இருந்தும் சில/பல சமயங்களில் அதில் வெற்றியடைவது என்பது நம்மில் பலருக்கு “கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட முடவன் கதையாய் போய்விடுகிறது!”. இதற்க்கு காரணம், நேரத்தை நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது நேரத்துடன் நம்மை நாம் எப்படி தொடர்புபடுத்திக்கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்!


நேரத்துடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதென்பது கிட்டத்தட்ட முதலீடு செய்வதைப்போல. அதாவது, நேரத்துடனான நம் உறவு/தொடர்பு ஒரு கொடுக்கல்-வாங்கல் போலத்தானாம்?! தொடக்கத்தில் நாம் முதலீடு செய்யும் ஒரு குறிப்பிட்ட கால அளவானது இறுதியாக நமக்கு நல்ல லாபத்தைக் தரும் என்கிறார்கள் உளவியலாளர்கள்!


என்னங்க ஒன்னும் புரியலீங்களா? எனக்கும் அப்படித்தான் இருக்கு. அதுக்காக அப்படியே விட்றவா முடியும். வாங்க நேரத்திட்டமிடலா நாமளா அப்படீன்னு ஒரு கை பார்த்துடுவோம்……






நேரத்திட்டமிடலில் வெற்றியடைய முத்தான 10 சுலபமான வழிகள்!

  நம்ம நேரத்தை நன்றாக திட்டமிட்டு செலவு செய்ய, அப்படிச்செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கும் 10 முத்தான, அதேசமயம் மிகவும் சுலபமான (?) வழிகளை பின்வரும் பட்டியலில் பார்ப்போம்…..

1.ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதை நிறுத்துங்கள் (Stop multitasking): சமீபகாலங்கள்ல, பொதுவாக பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது. அடிப்படையில், அறிவியல்ரீதியாக பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு தாவுவது/மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது என்பது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது!


2.முக்கியத்துவம் வாய்ந்த செயல்களை தேர்வு செய்து கொள்ளுங்கள் (Set your priorities): ஒவ்வொரு நாளுக்குமான தலையாய செயல்களை மனதில் பதிவு செய்துகொள்ளுங்கள். உங்கள் தேர்வுகளின் முக்கியத்துவங்கள் மாற்றியமைப்பட்டால் பொறுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, தீப்பற்றிக்கொண்ட ஒரு கட்டிடத்தை விட்டு வெளியேறுவதைவிட பணியிடத்தில் ஒரு விண்ணப்பத்தை எழுதி முடிக்கவேண்டுமென்பது முக்கியமானதல்ல!


3.உடற்பயிற்ச்சி செய்யுங்கள் (Exercise): உங்கள் உழைப்புத்திறனையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த மனநலம் என்பது மிக அவசியம்! அதனால், புதிய யுக்திகளை கண்டறியவும் மன நலனை மேம்படுத்தவும், பணிக்கிடையில் நல்ல காற்றை சுவாசித்து காலாற நடந்துவிட்டு வாருங்கள்!


4.‘முடியாது’ என்பதை கனிவாக சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள் (Learn to say ‘no’ with kindness): நம் பணிகளுக்கிடையில் நண்பர்களுக்கு சிறிய உதவிகள் செய்வதென்பது அவசியம்தான் என்றாலும், அச்சிறு உதவிகள் சில சமயங்களில் மிகுந்த நேரம் பிடிப்பவையாக, அயற்ச்சியைத் தருபவையாக, முக்கியத்துவம் குறைந்தவையாக இருக்கும் பட்சத்தில், கனிவாக “என்னால் இவ்வுதவி செய்ய இயலவில்லை” எனச் சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்! இது உங்கள் நேரத்தை சேமிக்கவும், மன உளைச்சலைத் தவிர்க்கவும் உதவும்!


5.காலையில் ஒரு 15 நிமிடம் முன்பாக எழ முயற்ச்சியுங்கள் (Get up fifteen minutes early): ஒவ்வொரு நாளும் காலையில் சீக்கிரம் எழுந்து, பணிகளைத் தொடங்கும்முன் தியானம் செய்யவோ, உங்களின் டைரிக் குறிப்பு எழுதவோ பழகிக்கொள்ளுங்கள். உடல் நலனைப்போலவே மனநலனும் வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதது! உடற்பயிற்ச்சியிலும், மனநலன் காக்கும் செயல்களிலும் ஈடுபடுங்கள்!


6.போதுமான அளவு ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் (Get enough rest): ஒவ்வொரு நாளும் உறங்கச் செல்லுமுன், அதிகப்படியாக நீங்கள் செலவு செய்யும் ஒரு மணி நேரம், உங்களின் அடுத்த நாளின் ஒரு மணி நேர வேலையை குறைப்பதில்லை. ஓய்வின்றி வேலைசெய்பவர்கள் குழப்பத்துக்குள்ளாவார்கள் என்கிறது உளவியல்!


7.எதிர்பார்ப்புகளை மேலான்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் (Manage expectations): உங்கள் அறையக் குப்பையாக்கிவிட்டு, விழுந்து விழுந்து சுத்தம் செய்வதற்க்கு பதிலாக, குப்பைகள் சேர்வதை முன்பே தவிர்த்துவிட்டால், குப்பையை சுத்தம்செய்வதில் வீணாகும் உங்களின் பொன்னான நேரம் சேமிக்கப்படும்!


8.மின்னஞ்சல் வாசிக்கும் நேரத்தை திட்டமிட்டு வைத்துக்கொள்ளுங்கள் (Check email at set times): ஒவ்வொரு மின்னஞ்சலும் குட்டி போடும் தெரியுமா உங்களுக்கு?! அதாங்க, நீங்க அனுப்புற ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் ஒரு பதில் மின்னஞ்சல் வருமே அதைச்சொன்னேன். அதாவது, மின்னஞ்சல்களை தினசரி சரியாக கவனித்துக்கொண்டால் நேர விரயம் ஏற்படாது. அதேமாதிரி, வேறு வேலை செய்யும்போது மின்னஞ்சல்களை பார்க்காதீங்க, கவனச்சிதறல் ஏற்படுவதை தவிர்க்க!


9.தேவையில்லாதபோது இணையம்/செல்பேசியை அணைத்துவிடுங்கள் (Unplug): அசினும், நயன்தாராவும் அடுத்த எந்த படத்துல நடிக்கிறாங்கன்னு தெரிஞ்சிக்கலைன்னா, ஒன்னும் குடி முழுகிப்பொயிடாது. அதனால, இணையத்தை உலாவுவதிலும், செல்பேசியில் குறுச்செய்தி அனுப்பவதிலுமே காலத்தைக் கழிக்காமல், இரண்டையும் சிறிது நேரம் அணைத்துவிட்டு, உடற்பயிற்ச்சியோ தியானமோ செய்து ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!


10.செயல்பட அதிக நேரம் இருப்பதாய் எண்ணிக்கொள்ளுங்கள் (Embrace time-abundant thinking): ஒவ்வொரு செயலைச் செய்யவும் போதுமான நேரம் இருக்கும்பட்சத்தில், அதை உணர்ந்து மன உளைச்சலைத் தவிர்க்கவேண்டும். குறிப்பிட்ட அந்தச் செயலுடன் தொடர்பில்லாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மாறாக, மனதுக்கு பிடித்தமான செயல்களில் ஈடுபட்டு மனதையும் லேசாக்கி, நேரத்தையும் சரியாக செலவு செய்யவேண்டும்.


நாம் எப்போதும் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்வதைத் தவிர்த்து நிகழ்காலத்தில் வாழப் பழகிக்கொண்டோமானால் மனஅழுத்தம் இருந்த இடம் தெரியாமல் தொலைந்துபோகும். நேற்றும் நாளையும் மாயைகள். அவை இனி இல்லை, இந்தக் கணம்தான் உண்மை என்று எண்ணி வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்ளுங்கள். வெற்றி நமக்கே…..!! மீண்டும் சந்திப்போம்.



இது தவிர, உங்களுக்குத் தெரிந்த நேரத்திட்டமிடல் குறித்த உத்திகள், பரிந்துரைகள் எதாவது இருந்தா சொல்லுங்களேன்……
நன்றி :http://padmahari.wordpress.com

நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!

(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல அட்டகாசமான 23 வழிகள்..!


1. ஆபீஸில் சும்மா உட்கார்ந்திருக்கும் போது பாஸூடைய கையெழுத்தைப் போட்டுப் பழகலாம். ஃப்யூச்சரில் உதவும்.
2. வெளியில் போய் நின்று கொண்டு போகிற வருகிற வண்டிகளை எண்ணிக்கொண்டிருக்கலாம்.
3. உங்கள் வைரி யாரேனும் இருந்தால் அவரது வண்டியின் பெட்ரோல் டேங்கில் கொஞ்சமாக சர்க்கரை போட்டு வைக்கலாம்.



4. நெட் கனெக்ஷ்ன் இருந்தால் சீரியல், சினிமா கதைகளை படித்து வைக்கலாம். வீட்டுக்குப் போய் டி.வி பார்க்கும் நேரம் மிச்சம்.



5. கடிகாரத்தைத் தூக்கிப் போட்டு ஒரே அடி... அதுதான் உண்மையிலேயே நேரத்தைக் கொல்வது.



6. பல்லிடுக்குகளை நாக்கினால் துழாவி ஏதேனும் உணவுத்துணுக்கு மாட்டுகிறதா என்று பார்க்கலாம், மாட்டினால் அதை மென்று கொண்டு இருக்கலாம்.



7. இன்டர்வியூவுக்காக வந்திருக்கும் ஏதேனும் ஒரு பிகரை பிக்கப் பண்ண டிரை பண்ணலாம். அவர் இன்டர்வியூவுக்காக வந்திருப்பதால் கண்டிப்பாக சிரித்துப் பேசுவார்.



8. கார்ட்டூன் போட்டுப் பழகலாம். முக்கியமாக உயரதிகாரிகளை. ஆனால் அந்தப் பேப்பர் அவரது கைகளில் மாட்டாமல் பார்த்துக்கொள்வது அதி முக்கியம்.



9. கண்களை மூடியபடி பகல் கனவு காணலாம், ஸ்கூல் நாட்களில் கணக்கு, பெளதீகம், ஹிஸ்டரி முதலிய வகுப்புகளில் செய்தது போல. கனவில் நமீதா, ரம்பா வகையறாக்களை வரவழைத்தல் நலம்.


10. கேஸ் எப்படி ஃபார்ம் ஆகிறது, கொட்டாவி, ஏப்பம் முதலியவை எப்படி உருவாகின்றன போன்றவற்றை யோசிக்கலாம்.

11. காபியைத் கை தவறிக் கொட்டி விட்டு ஹவுஸ் கீப்பிங் பையனிடம் அவன் தான் கொட்டி விட்டதாக வம்பிழுக்கலாம். இன்னொரு காபி கொண்டு வரச்சொல்லலாம். (ஆனால் இதை வீட்டில் முயற்சிக்கக் கூடாது.)


12. பேப்பரில் ஏரோப்ளேன், ராக்கெட் முதலிய கைவினைப் பொருட்களை செய்து பழகலாம். யார் அதிக தூரம் விடுவது என கொலீக்குடன் போட்டி வைக்கலாம். ஆனால், வேலை பார்க்கும் யார் மேலாவது மோத விட்டு பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.


13. இஷ்ட தெய்வத்தின் மேல் பாடல் எழுதலாம். இஷ்ட தெய்வம் இல்லையா? பிடித்தவர்கள் மேல் எழுதலாம். கானா எழுத முயற்சித்தால் நிறைய எழுத முடியும்.

14. ரெஸ்ட் ரூமுக்குப் போய் முகத்தை அஷ்ட கோணலாக ஆக்கி அழகு பார்க்கலாம். செல்போன் கேமரா இருந்தால் படம் பிடித்தும் வைக்கலாம்.



15. எல்லாவற்றையும் விட எளியதான ஒரே வழி தூக்கம்.


16. தொந்தியை வருடிக்கொடுப்பது போன்ற சிறு சிறு தேகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

17. கேஃபடேரியாவில் / கேன்டீனில் கூட்டம் அதிகமாக இருந்தால் ஸ்நாக்ஸை ஆர்டர் செய்ய குறுக்கு வழிகளை யோசிக்கலாம்.

18. வேறு யாராவது எழுதிய ஈ.மெயிலில் தப்பு கண்டுபிடிக்கலாம். முடிந்தால் அவரிடமே சொல்லி வெறுப்பேற்றலாம்.

19. யாரையாவது கம்பெனி சேர்த்துக் கொண்டு உங்கள் ஃப்ளோர் (தளம்) தவிர மற்ற ஃப்ளோர்களுக்கு ஒரு விஸிட் போய் வரலாம். லிஃப்டை தவிர்த்து படிகளில் நடந்து போனால் நேரமும் அதிகமாகும், அரட்டையும் அதிகமாகும்.

20. வீட்டிலுள்ள சுட்டிகளின் கம்ப்யூட்டர் கேம்ஸை கொண்டு வந்து டவுன்லோடு செய்து வைக்கலாம். போரடிக்கும் நேரங்களில் விளையாட உதவும்.

21. தொடக்கூடாத ஏதேனும் ஒரு பட்டனை தட்டிவிட்டு கம்ப்யூட்டரை ஹேங் செய்யலாம். சிஸ்டம் டிபார்ட்மெண்ட் ஆட்களை வரவழைத்தால் ஒரு முழு நாளையும் ஓட்டலாம்.

22. ஏதாவது ஒரு மியூஸிக் சேனலுக்கு போன் செய்து பிடித்த பாடல் கேட்கலாம். அதை உங்கள் சுபீரியருக்கு டெடிகேட்-டும் செய்யலாம்.

23. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாருக்காவது போன் செய்து (ஆபீஸ் போனிலிருந்து தான்) நலம் உசாவலாம். முன்னதாக போன் உரையாடல் ரெக்கார்ட் ஆகிறதா என்பதை மட்டும் செக் செய்து கொள்வது உசிதம்.


இந்தக் கட்டுரை யூத்ஃபுல் விகடனில் வெளியாகியுள்ளது.



அதை அங்கே படிக்க இங்கே கிளிக்குங்க....


http://youthful.vikatan.com/youth/yeskhastory01072009.asp




* துடிப்பான  வாசகர்கள்   தாங்கள் விரும்பும் நேரக் கொல்லியைப் பற்றிப் பதிவு செய்யலாம்.

Saturday, August 7, 2010

சில நகைச்சுவை துணுக்குகள்

சில நகைச்சுவை துணுக்குகள் ஒரு மடலின் வாயிலாக கிடைக்கப் பெற்றேன் . இதோ உங்களின் இதழ்களிலும் புன்னைகை மலர்களை நட்டுவைக்க அந்த நகைசுவை துணுக்குகள் .






மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...


கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?










பல்ப் - எடிசன்


ரேடியோ - மார்கோனி


பை-சைக்கிள் - மேக் மில்லன்


போன் - க்ராஹாம் பெல்


க்ராவிடி - நியூட்டன்


கரண்ட் - பாரடே


எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!










இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க


லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க.


















மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?


என்ன தெரியலையா?


அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?


















தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?


மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!


















அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?


மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


















நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...


சொல்லட்டுமா?


பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...


ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

Wednesday, August 4, 2010

நான் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்!

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

  நான் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்!


என் மொபைலுக்கு வந்த சில எஸ்.எம்.எஸ் கடிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்சி அடைகிறேன் தோழர் பெருமக்களே!







@நண்பர்கள் தின எஸ்.எம்.எஸ்.



மாப்ள

மச்சி

நண்பா

ஃப்ரெண்ட்

தோஸ்த்

சகல

தோழா

மாமு

மச்சான்

பங்காளி

மாம்ஸ்

உறவே இல்லாமல் வந்த உறவுக்கு இத்தனை பெயர்.நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





@நான் எஸ்.எம்.எஸ் அனுப்பினா நீங்களும் ரிட்டர்ன் எஸ்.எம்.எஸ் தான் அனுப்பணும்னு இல்ல.ஒரு ஹோண்டா சிட்டி கார்,கலர் டி.வி.,வாசிங்க் மெசின் இப்படி கூட அனுப்பலாம் ஓகே



@கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு.

இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல் இல்லை





அது நெஞ்சுவலி!



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





@அமெரிக்காகாரன் -நாங்கதான் முதல்ல நிலவுல கால் வெச்சோம்

ஆஸ்திரேலியாக்காரன் - நாங்கதான் முதல்ல வீனஸ் க்கு போனோம்

இந்தியா - நாங்கதான் முதல்ல சூரியன்ல காலை வெச்சோம்.



அமெரிக்கா-டேய் பொய் சொல்லாதீங்கடா சூரியன் ல கால் வெச்சா எரிஞ்சு போயிடுவோம்



இந்தியாக்காரன் கொய்யாலே..நாங்க போனது ராத்திரியில...





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@







#முடியாதுன்னு சொல்றவன் முட்டாள்

# எதுவும் தன்னால் முடியும் நு சொல்றவன் தான் புத்திசாலி!



இப்ப சொல்லுங்க எனக்கு ரீ சார்ஜ் பண்ணிவிட முடியுமா? முடியாதா?





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



வாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா



மாணவர்கள் -சார்.தமிழ்நாடு பூரா கெட்டுட்டேன்.சிட்டி பஸ் இருக்குன்றான்.ஏர்பஸ் இருக்குன்றான்.எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான்.பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான்.ஏசி பஸ் இருக்குன்றான்.ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.



டிப்போ விலியே இல்லையாம்





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



லவ்வர மட்டும் சைட் அடிச்சா சாதாரண வொர்க்!

அவ ஃபிரெண்டையும் சேர்த்து சைட் அடிச்சா அது ஹார்டு ஒர்க்!



ஒர்க் சில நேரம் ஃபெயில் ஆகலாம்



ஆனா ஹார்டு ஒர்க் எப்பவும் பலன் தராம போகாது.



@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



கேர்ள் - உங்க போன் அழகா இருக்கு.எங்க வாங்குனீங்க?



பாய் -ஓட்டப்பந்தயத்துல...



கேர்ள் -எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?



பாய் -போனுக்கு சொந்தக்காரன்,போலீஸ் அப்புறம் நான்.





@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



நடிகர் விஜய் மகன் -அப்பா இனிமே படத்துல நடிக்காதே!



விஜய் -ஏண்டா செல்லம்?



மகன் -பெத்தவங்க செய்யுற பாவம் அப்புறம் புள்ளைங்களுக்குத்தான் வந்து சேருமாம்.



@ ஒரு பிச்சைக்காரன் சாகும் போது கடவுளிடம் வேண்டினான்.

கடவுளெ அடுத்த ஜென்மத்துல என் பை நிறைய சில்லறை வேணும்.அப்படியே என்னை சுத்தி நிறைய பொண்ணுங்க இருக்கணும்

கடவுள் அப்படியே ஆகட்டும் பக்தா என்றார்.



அடுத்த ஜென்மத்தில் அவன் லேடீஸ் பஸ் இல் கண்டக்டராக பணி புரிந்தான்.







@தத்துவம்

உன்னை விட சிறந்தவன் கணவனாக வரும் வரை,அவளுக்கு நீ காதலன்’’

இது என்ன கலாட்டா?!!!

இது என்ன கலாட்டா?!!!

இது என்ன கலாட்டா?!!!இது என்ன கலாட்டா?!!!
______சரி இந்த போடோவுல எத்தினி பேரு ????



_______________________________________________________________
இத படியுங்க முதலில்..............................................




இது எனக்கு மெயில்ல


வந்தது..




நம்ம முதல்வர் கலைஞரோட

திடீர் மனமாற்றத்துக்கு

காரணம் ஒரு Letter தான்னு

நம்ம ஊளவுத்துறை சொல்லுது...



Blog வரலாற்றிலேயே

முதன் முறையாக...,



அந்த Letter உங்கள்

பார்வைக்கு..





To

முதல்வர் கலைஞர்.,

தலைமை செயலகம்.,

சென்னை



ஐயா.,

செம்மொழி மாநாடு நடத்துனீங்க..

எங்கும் தமிழ்., எதிலும் தமிழ்னு

சொன்னீங்க...



ஆனா ஒரு இடத்துல மட்டும்

சுத்தமா தமிழ் இல்லைங்களே..

அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல

தாங்க இருக்கு..



அதை நினைக்க நினைக்க

செம பீலிங் ஆவுதுங்க..



நீங்கதான் சீக்கிரம் இதுக்கு

ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..



அந்த இடம் - நம்ம டாஸ்மாக்



அங்கே இருக்கிற சரக்குக்கு

எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி

தமிழை வளர்க்கணும்க..



நானே சில பேர் யோசிச்சி

வெச்சிருக்கேன்..



உங்களுக்கு திருப்தி இல்லைன்னா

ஒரு குழு அமைச்சி நல்ல., நல்ல

பேரா வைங்க..



மிடாஸ் கோல்ட் - தங்க மகன்






நெப்போலியன் - ராஜராஜ சோழன்






கோல்கொண்டா - கங்கைகொண்டான்






வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்






ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அலுவலர் தேர்வு






சிக்னேச்சர் - கையெழுத்து






ஓல்டு மாங்க் - மகா முனி






ஜானி வாக்கர் - வெளிநடப்பு






கார்டினல் - பொதுக் குழு






மானிட்டர் - உளவுத் துறை






மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி






ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே






ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000





இப்படிக்கு



தமிழ் " குடி " மகன்,

டாஸ்மாக்,

தமிழ்நாடு



செய்தி : தமிழ்நாட்டில் மதுவிலக்கை

அமல் படுத்த தமிழக அரசு பரிசீலனை.





இன்று ஒரு தகவல் :

---------------------------



பால் லிட்டர் 28 ரூபாதான்.,

குவாட்டரோ 80 ரூபா.. - அதுக்காக

பால் குடிக்கிறவன் மதிப்பு

குறைஞ்சி போயிடாது..,

குவாட்டர் அடிக்கிறவன் மதிப்பு

ஏறிப்போயிடாது...

Saturday, July 31, 2010

சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !



சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்

சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும்


எனவே நாம் சற்று சிந்தித்து தண்ணீரின் மகத்துவத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் மற்றவருக்கு புரிய வைக்க வேண்டும்.

மொக்கையோ மொக்கை......

மொக்கையோ மொக்கை


ஒரு ஆம்பளை.+. ஒரு பொம்பளை.....ஆனந்தம்


ஒரு ஆம்பளை +இரண்டு பொம்பளை.... மகாஆனந்தம்

ஒரு அம்பளை+ 3 பொம்பளை.... பரமானந்தம்

ஒரு ஆம்பளை+4 பொம்பளை... பிரம்மானந்தம்

ஒரு ஆம்பளை+நிறைய பொம்பளை.. நித்யானந்தம்.

88888888888888888888888888888888888888888888

உலகில் பலரை காயபடுத்திய லைன்.....


சாரிங்க உங்களை நல்லா பிரண்டா நினைச்சிதான் நான்பழகினேன்..

பலரின் காயங்களை நீக்கிய வரிகள்..

திரிஷா இல்லைன்னா திவ்யா.....

==============

ஸ்டுடண்ட் சக்சஸ் பெயிலியர் இரண்டுத்துக்கும் காரணம்...

1. சக்சஸ்க்கு காரணம் பிரிலியண்ட் டீச்சர்

2.பெயிலியருக்கு காரணம் பியூட்டிபுல் டீச்சர்

==============================



மச்சி எனக்கும் என் லவ்வருக்கும் சீக்கரம் கல்யாணம் நடக்க போவுதுடா...ரொம்ப சந்தோஷம் மச்சி... எப்போ...????? எனக்கு வரும் மே10ஆம் தேதி,அவளுக்கு ஜுலை 20ஆம் தேதி....

=============

தாஜ்மகால் உலக அதிசயமா பார்க்க காரணம் என்னன்னு தெரியுமா?ஏன்னா இந்தியாவுல லோன் வாங்காம கட்டின கட்டிடம் அதுமட்டும்தான்..



===========

கெட்டவங்களுக்கு காட் நிறைய கேர்ள்பிரண்ட்ஸ் கொடுப்பார் ஆனா மொக்கை ஒய்ப் கொடுத்து கை விட்டுவார்.....ஆனா நல்லவங்களை ஒரு கேர்ள் பிரண்டும் கொடுக்காம கடவுள் சோதிப்பார் ஆன அன்பான ஓயப்பும்,அழகான மச்சினிச்சியும் கொடுத்து கைவிட மாட்டார்

==========

கஸ்டமர் ... சார் இந்த டிவி என்ன விலை?

சேல்ஸ்மேன்....ஒரு லட்சம் ரூபாய்

கஸ்டம்ர்...அம்மாடியோவ்... அப்படி என்ன இந்த டிவி உசத்தி...

சேல்ஸ்மேன்.....லேட்டஸ்ட் விஜய்படம் வந்தா அதுவா ஆப் ஆயிடும்...

===========

பசங்க பிரண்ட்ஸ் இருக்காங்க அதனால காதலிச்சா காதலை சேர்த்து வச்சிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதல் செய்கின்றார்கள்.... பெண்கள் பெற்றோர் இருக்காங்க எப்படியும் பிரிசிடுவாங்க என்ற நம்பிக்கையில் காதலிக்கின்றார்கள்...

=====

இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...





உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்

நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...

எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க தடிக்குதடி...

தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...

=============

தலைவர் கலைஞர் பேசுகின்றார்...





கருவரையும் இருட்டு


கல்லரையும் இருட்டு


இதை உணர்த்தவே தமிழகத்தில்


அடிக்கடிபவர் கட்டு..

===============

இன்றைய தமிழ்நாடு.....





படித்தவன் பாடம் நடத்துகின்றான்

படிக்காதவன் பள்ளிகூடம் நடத்து கின்றான்..

===================

ஒரு பெரியவர் ஒரு பார்க்குல ஒரு பயைனையும் பொண்ணையும் பார்த்தார்...

மறுநாள் அதே பையன் வேற பொண்ணு

அதுக்கு அடுத்த நாள் அதே பையன் வேற பொண்ணு...

இதுல இருந்து என்ன தெரியயுது...

பசங்க எப்பயும் மாற மாட்டாங்க... பொண்ணுங்கதான் அடிக்கடி மாறுவாங்க....

===================

அப்பா எதுக்கு சட்டம் ஒரே ஒரு மனைவியோட மட்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றது??? இது அநியாயமான சட்டம் இல்லையா?

மவனே உனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சிக்குவ.... அந்த சட்டம் நமக்கு எவ்வளவு சாதகமானதுன்னு ...

==============

When a lock is opened by many keys.. it becames bad lock


but


when keys open many lock, it becames master key

===============

அன்புடன்
விஜயகுமார்

 



Thursday, July 29, 2010

நீங்கள் ரசிக்க நான் எடுத்த போடோக்கள்-பாகம் 1

வர்கள பீச்-KERALA


கடல் மேலிருந்து கீழே PARKKALAM


நிலத்தடி நீர் - தனுஷ்KODI


sanddunes



மகாபலிPURAM





சூர்யா அஸ்தமனம்
















நீங்கள் ரசிக்க நான் எடுத்த போடோக்கள்

வடிவேலு வடிவேலு VADIVELU

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் பாவித்த வார்த்தைகளை கல்லூரியில் எவ்வாறு பயன்படுத்துவார்கள்,மற்றும் சினிமா விமர்சகர்கள் படங்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்று ஓர் சிறிய கற்பனை...

கல்லூரி

Class Test : சொல்லவே இல்ல...

Teaching : முடியல ...

Exam : உக்காந்து யோசிப்பாயிங்களோ....

Arrears : ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...

Bit : எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...

Result : மாப்பு..வச்சிடாண்டா ஆப்பு..

Degree : வரும்... ஆனாவராது...

Assaignment: ஹா ... இது ரொம்ப புதுசா இருக்கே..

Class Attendence: அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..

Professors: ஒரு குருப்பதான் அலையுறாங்க...

Lecture: இப்பவே கண்ண கட்டுதே..

Student Fight: இந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டன்..நீயும் வரப்படாது..பேச்சு பேச்சா இருக்கணும்..



சினிமா



கோவா: அவனா நீ?...

சத்யம்: யோவ் ..நானும் ரௌடி தான்யா

வீராசாமி: இப்படி உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்குறாங்க...

சுறா: Why blood?...Same blood....

ஆழ்வார்: எப்பிடித்தான் கண்டுபிடிகிறன்களோ?..

குருவி: என்ன வெச்சி காமெடி கிமெடி ஒன்னும் பண்ணலையே?..

ராவணா: என்ன இது சின்ன -புள்ள தனமா இருக்கு...

வில்லு: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் ...இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடம்மா ...

குசேலன்: பாடி ஸ்ட்ராங்கு .....basement கொஞ்சம் வீக்

பழனி: புள்ளயாரே பெருசாளில போறாரு ...பூசாரிக்கு புல்லேட்டு கேக்குதோ புல்லேட்டு

ஏகன்: சொங்கி மங்கி.....

வேட்டைகாரன்: வேணாம் ..வலிக்குது ...அழுதுடுவேன்

செம காமெடி-வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.....



சமீபத்தில் சில சஞ்சிகைகளில் நான் படித்த ஜோக்குகளின் தொகுப்பே இந்த பதிவு...


1."பயந்தவன் சொல்லுவான் அந்த பிகரோட அண்ணன் ஒரு ரவுடின்னு...
துணிந்தவன் சொல்லுவான் அந்த ரவுடியோட தங்கச்சி சூப்பர் பிகருன்னு.....'"

2."மன்னா எதிரிநாட்டு மன்னர் அனுப்பும் புறாக்களை சமைத்து சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் கேட்டீர்களா?..."
ஏன்,என்னாச்சு?...
புறாத்தொல் போர்த்திய காகம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளான் என்றால் பாருங்களேன்.."

3."கட்சிக்கொடி ஏன் அரைக்கம்பத்தில பறக்குது?
கட்சில இருந்த இறுதி தொண்டரும் ஏதிர்கட்சிக்கு போய்ட்டாராம்.."

4."கண்களை மூடிப்பார்தேன் கனவில் வந்தாள்....
கண்களை திறந்து பார்த்தேன்..நாசமப்போறவா..கணவனோட வந்தாள்..."

5."கபாலிக்கு பாராட்டுவிழா நடத்துறாங்களே...எதுக்கு?..
மாமூல் கொடுக்கிறவங்க பட்டியல்ல தொடர்ந்து 25 வருஷமா முதலிடதில இருக்கானாம்..."

6."இந்த விலைவாசியில தலைவருக்கு இவ்வளவு பெட்ரோல் எங்கேருந்து கிடைச்சுது...
தீக்குளிக்க போறேன்னு அறிக்கை விட்டாராம்.."

7."இப்ப நீங்க ரொம்ப கிரிடிகலான நிலைமைல இருக்கீங்க....
நான் என்ன செய்யனும் டாக்டர்?...
உடனே புல் பில்லையும் செட்டில் பண்ணிடனும்!..."

8."நமது கட்சி எம்-எல்-ஏ-க்கள் விலை போவதை நான் குறைகூற விரும்பவில்லை.அது அவர்களின் ஜனநாயக உரிமை.அதே நேரத்தில் அவர்களுக்கு கிடைக்கும் பணத்தில் பாதியையாவது வளர்த்து ஆளாக்கிய கட்சிக்கு வழங்கும்படி தலைவர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்.."

9."கூட்டணிக்காக நம்ம தலைவர் இப்படியா அலைவார்?..""
என்ன பண்ணினார்?..
கூட்டணிக்கு கட்சிகள் தேவைன்னு விளம்பரம் பண்ணியிருக்காறேன்னா பாரேன்.."

10."தலைவரை குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொன்னது ரொம்ப தப்பபோச்சு..
ஏன்?..
காதலிச்சு கைவிட்ட பொண்ணுகள் பெயரா வைசுகிட்டு இருக்கார்.."

11."டாக்டருக்கு ஏதோ வேண்டுதலாம்....
அதற்காக பேஷண்டுக்கு ஆபரேஷன் பண்ணிட்டு 108 தையல் போடுறதெல்லாம் ரொம்ப ஓவர்!.."

12."மாப்பிள்ளை பாரின் ரிடர்ன் என்று சொன்னதை நம்பி பொண்ணு கொடுத்தது தப்பாப்போச்சு....
ஏன் என்ன ஆச்சு?..
இப்பதானே தெரியுது..மாப்பிள்ளை பாரின் போக புறப்பட்டு பாதியிலேயே திரும்பி வந்தவர் என்று..."

Tuesday, July 27, 2010

WELCOME TO SALEM METRO JAYCESS BLOG - JCI SALEM METRO ,SALEM is one of the oldest chapter in the ZONE 17


SECRETARY SPEECH


GURUJI'S SPEECH

ZONE PRESIDENT'S SPEECH


OUR PRESIDENT'S SPEECH




ME AND MY BELOVED PRSIDENT


LATEST R2R MEET HOSTED BY OUR SALEM METRO JAYCESS ON 18-7-2010